19 எம்.எல்.ஏக்கள் பதவியை பறிக்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கூறி மனு அளித்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், தன்னிடம் தகவலே தெரிவிக்காமல் இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுத்ததாகவும்,
அவர்கள் அதிமுகவுக்கு விரோதமாக செயல்பட்டனர் என்றும் எனவே அவர்கள் பதவியை பறிக்க சபாநாயகரிடம் பரிந்துரை அளித்துள்ளதாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
0 comments: