சென்னை : வீட்டில் திருட்டி டிவிடி தொழிற்சாலையை நடத்தி வந்த 2 ேபரை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ₹1.7 கோடி மதிப்புள்ள டிவிடிக்கள் மற்றும் 15 ரைட்டிங் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகர் அஜித் நடித்த விவேகம் திரைப்படம் நேற்று முன்தினம் தமிழகத்தில் வெளியானது.
இதைபோல் அண்மையில் திரைக்கு வந்த திரைப்படங்களாக தரமணி, வேலையில்லா பட்டதாரி-2 உள்ளிட்ட திரைப்படங்கள் திருட்டு டிவிடிக்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் ரகசியமாக திருட்டு டிவிடிக்கள் தயாரிக்கும் நபர்களை கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே விவேகம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் ேநற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து விவேகம் திரைப்படத்தின் திருட்டு டிவிடிக்கள் அதிகளவில் நடமாடுவதாக புகார் அளித்தார். அதன்படி, திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது புழல் பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அந்த இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மிகப்பெரிய அளிவில் திருட்டு டிவிடிக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. இதை நடத்தி வந்த ரெட்ரேரி பகுதியை சேர்ந்த ஜெயவேல் (26), அதேபகுதியை சேர்ந்த முகமது ஜமாலுதின் (33) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் தயாரிக்கும் திருட்டு டிவிடிக்கள் பர்மா பஜார் உள்ளிட்ட சென்னை முழுவதும் விறப்னை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ₹1.7 கோடி மதிப்புள்ள விவேகம், தரமணி, வேலையில்லா பட்டதாரி-2, ஆங்கிலப்படங்கள் என 20 ஆயிரத்து 500 டிவிடிக்கள் மற்றும் திருட்டு டிவிடிக்கள் தயாரிக்க பயன்படுத்திய விலை உயர்ந்த 15 டிவிடி ரைட்டிங் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
0 comments: