டி.டி.வி.தினகரனின் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்த வரும் திங்கட்கிழமை அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினகரனின் ஆதரவு எம்எலஏக்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால், இந்த அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இந்த நெருக்கடி குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் திங்கட்கிழமை சென்னையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments: