சிங்கப்பூர்
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகிய இணைப் பேராசிரியர் டாக்டர் யாக்கோப் இப்ராஹிம் சிங்கப்பூரிலிருந்து சவுதி அரேபியாவிற்குப் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களை தலைமையேற்று அழைத்துச் சென்றுள்ளார்.
சாங்கி விமான நிலையத்திலிருந்து 340 யாத்ரீகர்களுடன் நேற்று அவர் கிளம்பினார்.
சிங்கப்பூர் சவுதி அரேபியாவுடன் கொண்டுள்ள 40 ஆண்டு இருதரப்பு நல்லுறவை அனுசரிக்கும் வகையில், சிங்கப்பூரிலிருந்து புனிய ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான எண்ணிக்கை இவ்வாண்டு 800க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் யாக்கோப் யாத்ரீகர்கள் நல்ல உடல்நிலையுடன் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தாம் வேண்டிக்கொள்ளவதாகத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
0 comments: