சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.
தற்போது முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக 21 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணியில் இணைந்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுவையில் முகாமிட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார். இந்நிலையில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக எம்.எல்.ஏக்கள் நேரில் சந்திக்க உள்ளனர்.
அப்போது, சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்த உள்ளனர். இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகின்றனர்.
0 comments: