Thursday, 7 September 2017

இருவரி செய்திகள்.08/09/2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் : தலைமைச் செயலர் உத்தரவு.

பேருந்து நிலைய விபத்து : முதல்வர் நிவாரண தொகையை ஏற்க உறவினர்கள் மறுப்பு.

அனிதா தற்கொலை வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திருச்சியில் இன்று அனைத்து கட்சி கூட்டம்.

நீட் எதிர்ப்பு: திருச்சியில் இன்று அனைத்து கட்சி பொதுக் கூட்டம்- அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு?

21 திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண் காவலர்கள் மீது லாரி மோதி விபத்து.

நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: திருநங்கை கிரேஸ் பானு மீது வழக்குப்பதிவு.

ஆளில்லா ரயில்வே கேட்டுகளை ஓராண்டிற்குள் அகற்ற ரயில்வே அமைச்சர் உத்தரவு.

அரசு அலுவலகங்களில் பணிகள் தொய்வின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகத்தின் நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு: ஊரங்கு உத்தரவு அமல்.

வல்லூர், அத்திப்பட்டு அனல்மின் நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்.

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வர திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.

கும்பகரை அருவியில் குளிக்க 7வது நாளாக தடை.

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு மதுரையில் போராடிய 81 பேருக்கு சிறை.

அவிநாசியில் நீர்வழிப்பாதை மற்றும் நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு: வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

ஜம்முவில் யாசின் மாலீக் கைது.

ராணுவ வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து.

பளு தூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் தங்கம்.

திருக்குடை ஊர்வலம் 16ம் தேதி கவுனி தாண்டுகிறது.

குடகு மலையில் முகாமிட்டுள்ள தினகரன் எம்.எல்.ஏ.,க்கள்!

உள்ளாட்சி தேர்தல்;கலெக்டர்களுடன் ஆலோசனை: மாநில தேர்தல் கமிஷன் முடிவு.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, சென்னையில் 12-ந் தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாரீஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு - வங்கியை தகர்க்க இருந்த திட்டம் முறியடிப்பு.

டெல்லியில் சாமியார் வேடமிட்டு விவசாயிகள் போராட்டம்.


ஊழல் வழக்கில் ராஜபக்சே செயலாளருக்கு 3 ஆண்டு சிறை - கொழும்பு ஐகோர்ட்டு அதிரடி.








0 comments: