🌍♨11\09\17♨🌎
🌎செங்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகை கொள்ளை
🌎நீலகிரியில் தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு
🌎பீகாரில் வாகன சோதனையின் போது விபத்து: 4 காவலர்கள் உயிரிழப்பு
🌎கனமழை எதிரொலி: குன்னூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
🌎மலேசியாவில் இருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தவரை காணவில்லை: போலீசார் விசாரணை
🌎பழனி முருகன் கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்- பிரேமலதா சாமி தரிசனம்
🌎காரைக்குடியில் ஆந்திர பக்தர்களின் பேருந்து விபத்து: 14 பேர் காயம்
🌎சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல்
🌎தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு 23வது நாளாக வெள்ள அபாயம் எச்சரிக்கை
🌎கும்பக்கரை அருவியில் குளிக்க 10-வது நாளாக தடை நீட்டிப்பு
🌎ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை
🌎கவுரியை கொன்றது யார்? சிறப்பு படை ஆந்திரா விரைவு
🌎அண்ணாமலை பல்கலை மருத்துவ கல்லூரி இன்று மீண்டும் திறப்பு
🌎புதுகையில் டெங்குவுக்கு சிறுவன் பலி
🌎மேட்டூர் அணை 74 அடியை எட்டுகிறது
🌎நெடுவாசல் போராட்டம் 152வது நாளாக நீடிப்பு
🌎வேளாண் பல்கலையில் 4வது கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்
🌎25 ஆண்டுகளாக இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது
🌍கும்பக்கரை அருவியில் குளிக்க 10-வது நாளாக தடை நீட்டிப்பு
தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளபெருக்கு அதிகரித்துள்ளது. இதனை அடுத்து அருவியில் குளிக்க 10-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
🌍ஐட்ரோ கார்பனுக்கு எதிரான வழக்கில் வருகிற 13-ஆம் தேதி வைகோ வாதாடுகிறார் - சிங்கம் களமிறங்கிடுச்சு மூமண்ட்.
தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட விவசாய அணி சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருகிற 13-ஆம் தேதி தான் நேரில் ஆஜராகி வாதாட இருப்பதாக தஞ்சாவூரில் வைகோ தெரிவித்தார்.
🌍ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் பகுதியில் ஊடுருவ முயன்ற ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
🌍அ.தி.மு.க., பொதுக்குழுவில் தினகரன் ஆதரவாளர்கள்?
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில்,தினகரன் ஆதரவாளர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்
🌍போராட்டமா பண்றீங்க . இந்தா பிடிங்க நோட்டீஸ் --- 1 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை பயமுறுத்தும் தமிழக அரசு !!!
கடந்த 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 1 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
🌍வீடுகள், கட்டிடங்களுக்கு சட்டத்திற்குப் புறம்பாக கூடுதல் வரி வசூலிப்பு; காங்கிரசு கண்டனம்.
சிவகங்கை நகராட்சியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு நகராட்சியின் சார்பில் கூடுதல் வரி வசூலிக்கப்படுவதற்கு மாவட்டக் காங்கிரசு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
🌍இன்று மும்பை செல்கிறார் ஆளுநர் !! தமிழக எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் ஆலோசிப்பாரா !!!
தமிழகத்தில் ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசகர் ராவ் இன்று மும்பை புறப்பட்டு செல்கிறார். அங்கு நான்கைந்து நாட்கள் தனது பணியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
🌍போராடிய மாணவர்களை சிறையிலடைப்பதா?': மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களையும், வாலிபர் சங்கத் தலைவர்களையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலைசெய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
🌍லீவு தராததால் விரக்தி அடைந்த போலீஸ்காரர் தற்கொலை - காரைக்குடியில் பரபரப்பு.
காரைக்குடியில், விடுமுறைக் கிடைக்காததால் விரக்தி அடைந்த காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார்.
காரைக்குடி மாவட்டத்தில், இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக தமிழ்நாடு சிறப்புக் காவல்படை பழனி 14-வது பட்டாலியன் காவலாளர்கள் முகாமிட்டுள்ளனர்.
மதுரை அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த காவலரான அருண்பாண்டியன் (21) என்பவரும் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். இவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விடுமுறை தருமாறு உயரதிகாரியிடம் கேட்டுள்ளார்.
ஆனால், விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அருண்பாண்டியன், காரைக்குடி சங்கராபுரம் பகுதியில் தங்கியிருந்த தனியார் திருமண மண்டபத்தின் பின்புறப் பகுதியில் விஷம் குடித்து நேற்று மயங்கிய நிலையில் கிடந்தார்.
அதனைப் பார்த்த சக காவலாளர்கள் உடனே, அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.
🌍ஜியோ LTF மாடல்களுக்கு 20% டேட்டாவுடன் மேலும் சில சலுகைகள்
தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சி செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் புதிய 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது என்பதும், இந்த போனுக்கு அதிவேகமாக முன்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒருசில மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு 20% அதிகமான டேட்டாவை அளிக்கின்றது. அதுமட்டுமின்றி ஒருசில LTF மாடல்களுக்கு சிறப்பு சலுகையையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
🌍யு.எஸ்., ஓபன்: ரபேல் நடால் சாம்பியன்
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த இந்த ஆண்டில் கடைசி கிராண்ட் கிராண்ட்ஸ்லாம் தொடர் யு.எஸ்., ஓபன் டென்னிஸ். இதன் பைனலில், உலகின் ‛நம்பர்-1' வீரரான ஸ்பெயினின் நடால் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மோதினர். இதன் முதல் செட்டை 6-3 என நடால் எளிதில் கைபற்றினார். அடுத்த இரு செட்களையும் நடால் 6-3, 6-4 என தனதாக்கினார். முடிவில், நடால் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றக பெற்று யு.எஸ்., ஓபன் பட்டத்தை 3வது முறையாக கைபற்றினார். இந்த போட்டி 2 மணி 30 நிமிடங்களில் முடிந்தது. இது நடால் வெல்லும் 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.
🌍ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
விஜயவாடா: ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ள விஜயவாடாவிற்கு ஐந்தே நிமிடங்களில் செல்ல குழாய் வழியாக பயணம் செய்யும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை அம்மாநில அரசு செயல்படுத்த உள்ளது.
🌍ஓய்வு முடிவை அறிவித்தார் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தனது 70 ஆண்டு கால வழக்கறிஞர் பயணத்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய பார் கவுன்சில் சார்பாக, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், "வழக்கறிஞர் தொழிலிலிருந்து, ஓய்வுபெற முடிவு எடுத்திருக்கிறேன். என் உயிர் உள்ளவரை, பொது வாழ்வில் இருப்பேன். அரசியலில் ஊழலை ஒழிப்பது, என் புதிய பணியாக இருக்கும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக என் போராட்டத்தைத் தொடர்வேன். ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களுக்கு, ஆலோசனையையும் வழங்குவேன்.
🌍டார்கெட் கோலி: மாஸ்டர் பிளான் போடும் ஸ்மித்!
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி வருகின்ற 17-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இலங்கையை டெஸ்ட், ஒரு நாள், டி-20 என்று அனைத்திலும் வீழ்த்தி இந்தியா கெத்தாக இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில், வங்கதேசத்துடன் ஒரு டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியால் சற்று அப்செட்டுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இதையடுத்து, அந்த அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியத் தொடர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில், "சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்வது எப்போதுமே சவாலான ஒன்றுதான்.
அதுவும் அந்த அணி தற்போது இலங்கையை வொய்ட் வாஷ் செய்துள்ளது. இதனால், அதிக நம்பிக்கையுடன் அந்த அணி களமிறங்கும் அஸ்வின், ஜடேஜா இல்லாததால் அந்த அணி பலம் குறைந்ததாகக் கூறமுடியாது. அக்ஸர் பட்டேல், சஹால், குல்தீவ் யாதவ் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். இதனால் அந்த அணியின் சுழற்பந்துத் துறை வலுவாகதான் உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரைதான் கோலிதான் முக்கியம். அவரை அமைதிப்படுத்தினாலே வெற்றி பெற முடியும்" என்றார்.
🌍பத்திரிகையாளர் கவுரி கொலை வழக்கில் துப்பு: அமைச்சர் தகவல்
பெங்களூரு : கர்நாடகாவில், பெண் பத்திரிகையாளர், கவுரி லங்கேஷ் கொலையில், துப்பு கிடைத்துள்ளதாக, அம்மாநில உள்துறை அமைச்சர், ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார்.
🌍எஸ்.வி சேகரின் கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பதிலடி!
கடந்த சில நாள்களுக்கு முன்பாக, தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் சார்பில், மறைந்த மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனிதாவுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் பல்வேறு இயக்குநர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, இயக்குநர் அமீருக்கும், ரஞ்சித்துக்கும் இடையே சிறு கருத்து மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இணக்கமான சூழல் உருவாகி கூட்டமும் நிறைவுபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் "தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித்."" தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்" என்று ட்வீட் செய்திருந்தார்.
🌍பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 12) நடைபெறுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🌍அமெரிக்காவை அச்சுறுத்தும் இர்மா புயல்..!
அட்லான்டிக் பெருங்கடலில் உருவான இர்மா புயல் அமெரிக்காவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கரீபியன் தீவுகளை காவு வாங்கிய இந்த புயல், அங்கு பெரும் சேதங்களை விளைவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் பெரும் புயலாக இது கருதப்படுகிறது.
🌍மக்கள் குறைதீர்ப்புக்கு மத்திய அரசின் வலைதளம்!
வலைதள முகவரி: www.pgportal.gov.in
அரசுத் துறைகள் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதற்கான ஒருங்கிணைந்த மையமாக இந்த வலைதளம் இயங்கி வருகிறது.
பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கீழ் இந்த வலைதளம் இயங்குகிறது.
பொது நிர்வாகம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறை, பணியாளர் நலத் துறை, பொதுமக்கள் குறைதீர்ப்பு & ஓய்வூதியத் துறை, மக்கள் குறைதீர்ப்பு இயக்குரகம், மத்திய அமைச்சரவை செயலகம் ஆகியவை இந்த மனுக்களைக் கையாளுகின்றன.
அனைத்துத் துறைகளிலும் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு அதிகாரிகளின் பெயர்கள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
🌍அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் திங்கள்கிழமை (செப்.11) முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
🌍அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
🌍கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி மோட்டார் சைக்கிளில் பிரச்சாரம்;
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவ, மாணவிகள் தற்கொலை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரியலூரைச் சேர்ந்த நபர் நேற்று தஞ்சாவூருக்கு வந்தார்.
🌍சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல்
திருவள்ளூர்: சோழவரம் அருகே அலமாதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. பருவ மழை காலங்களில் மணல் மூட்டைகளை தயாரிக்க பொதுப்பணித்துறையிடம் மணல் ஒப்படைக்கப்பட்டது.
🌍விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் ரசாயன தாக்குதல்- உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: நாடுமுழுவதும் முக்கிய விமானம் மற்றும் ரயில் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது வாகனங்களில் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
0 comments: