அனிதாவை எல்லோரும் தங்கையாக பார்க்கும் நிலையில், நீங்கள் சாதியை வைத்து பார்ப்பது உங்கள் சிந்தனைக்கு ஆபத்தானது என இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு சீமான் பதிலளித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர முடியாத காரணத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த வாரம் நடந்த அனிதாவுக்கான உரிமையேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல திரைப்பட இயக்குனர் ரஞ்சித், ஊருக்கு ஒரு சேரியும் தெருவுக்கு ஒரு சாதியும் இன்னும் இருக்கிறது.
தமிழன் சாதியால் பிரிந்து கிடக்கிறான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.
இந்நிலையில், ரஞ்சித்தின் பேச்சுக்கு பதில் கூறியுள்ள சீமான், ரஞ்சித் ஆதங்கத்தை யாரும் மறுக்க முடியாது.
புரையோடிப்போன சாதியப் புற்று நம் இனத்தை செல்லரித்துக் கொல்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஆனால், போராடும் எல்லோரும் அனிதாவை தங்கையாகப் பார்க்கும் போது, ரஞ்சித் அவர் சாதியை பார்க்கிறார்.
இது அவர் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது என கூறியுள்ளார்.
0 comments: