Sunday, 3 September 2017

திரூவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சாலை விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் இறப்பு! எம்.ஹச்.ஜவாகிருல்லாஹ் அனுதாபம்!

முத்துப்பேட்டை; திருத்துறைப்பூண்டி சாலை உப்பூரில் மாலை 6மணியளவில் காரும் பைக்கும் மோதிக்கொண்டதில்
சம்பவ இடத்திலேயே இருவர் மரணத்தினர்.

கோட்டூரை சேர்ந்த சிராஜ் மற்றும் உப்பூரை சேர்ந்த சீனி (எ)சீனிவாசன் இருவரும் சம்பவ இடத்திலியே இறந்தனர்.

சிராஜ் மனைவி சிகிச்சைக்காக பலத்த காயங்களுடன் தமுமுக ஆம்லன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி கொண்டு செல்லப்பட்டது தற்போது சிராஜ் மனைவியும் இறந்து விட்டார்.

சிராஜ் தமுமுக முக்கிய பொருப்பில் இருந்து வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்வத்திற்கு முத்துப்பேட்டை பைத்துல் மால் ஆம்லன்ஸ்.தமுமுக ஆம்லன்ஸ் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்த இறப்பு செய்தியறிந்து தமுமுக தலைவர் எம்.ஹச்.ஜவாஹிருல்லா அவர்கள் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

0 comments: