Saturday 16 September 2017

துப்பு கொடுத்தால் பரிசு; ராக்கர்ஸ் புகைப்படம் சிக்கியது...விஷால் அதிரடி அறிவிப்பு!!

தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் ஆகிய இணையதள நிர்வாகிகளை பற்றி தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புதிய தமிழ் படங்கள் திரைக்கு வந்த சில நிமிடங்களிலே, இன்னும் சொல்லப்போனால் திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி வருகின்றன. அதில், மிகவும் பிரபலமான இணையதளமாக விளங்குவது தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் தான்.

இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் நிர்வாகிகளை பற்றி தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகியை சென்னையில் பிடித்துவிட்டோம் என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நேரில் சென்று விசாரித்ததில், அந்த நபர் தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகி அல்ல என்றும் வெறும் டீசர் மற்றும் புதிய திரைப்படங்களின் லிங்க்குகளை வெளியிடடும் தமிழ்கன் டாட் இன் என்ற இணையதள நிர்வாகி கெளரி சங்கர் என்றும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் இணையதளத்தின் நிர்வாகியை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்த விஷாலுக்கு தற்போது, தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய வெப்சைட்களின் அட்மின் புகைபடங்கள் சிக்கியுள்ளது.

அந்த இருவரின் புகைப்படங்களை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டு
இவர்கள் இருவரும் கனடா மற்றும் சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும் அடையாளம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டவருக்கும் இந்த இணையதளங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

0 comments: