நீட்தேர்விற்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுபள்ளி மாணவிகளின் திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
11,12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளின், நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களை சமாதானம் படுத்த முடியாமலும்,அப்புறப்படுத்த முடியாமலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் திணறி வருகின்றனர்.
தற்போது வரை வெறும் 80 மாணவிகள் மட்டுமே ஈடுபட்டுள்ள இந்த போரட்டத்தை கூட கலைக்க முடியாமால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல்திணறி வருகின்றனர்.
மேலும், ஆசிரியர்கள் எவ்வளவு சொல்லியும் மாணவிகள் கேட்கும் பாடில்லை. ஒரே உறுதியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு மாணவியை பளார் என கொடுத்துள்ளார். மேலும் அந்த மாணவியின் முடியை பிடித்து இழுத்து, கன்னத்தில் அடித்ததாக மாணவி பேட்டி அளித்துள்ளார்.
டிசி கொடுத்து அனுப்பிவிடுவோம் என்றும் மிரட்டியதாக மாணவிகள் கூறினர்
இதன் காரணமாக இந்த போராட்டம் சற்று திசை திரும்ப ஆரம்பித்துவிட்டது .
0 comments: