தமிழக மக்கள் விரும்பினால், அரசியலுக்கு வர தயார் என்றும், ரஜினியின் விருப்பத்தைப் பொறுத்து அவருடன் அரசியலில் இணைந்து செயல்பட தயார் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளா
நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழக அரசியலையும், அரசியல் தலைவர்களையும் தாறுமாறாக விமர்சித்து வருகிறார். தனது அதிரடி டுவீட்டர் அறிவிப்புகளால் ஓட்டுமொத்த தமிழக அரசியலையும் தன்வசம் இழுத்து வரும் நடிகர் கமல்ஹாசன், தமிழக மக்கள் விரும்பும் பட்சத்தில் அரசியலுக்கு வரத் தயார் என்று மற்றுமொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கமல் கூறியதாவது,
நடிகர் ரஜினிகாந்திற்கும், தமக்கும் தொழில் ரீதியிலான போட்டிகள் இருந்தாலும், முக்கியமான பிரச்சினைகளில் இருவரும், ஒருவரையொருவர் சந்தித்து ஆலோசிப்பது வழக்கம் என்றும், அரசியல் களத்தில் நுழைந்த பிறகு, ரஜினியின் விருப்பத்தைப் பொறுத்து அவருடன் அரசியலில் இணைந்து செயல்பட தயார் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய அரசியல் குறித்த தனது கருத்துகளை கூறும் போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஏன் பேசவில்லை என்பது போன்ற கேள்விகள் தன்முன் வைக்கப்படுவதாக கூறிய கமல், அப்போது, ஊரே பேசமால் அமைதியாக இருந்ததால், ஊரோடு கூடி வாழ்ந்த தாமும் பேசவில்லை என்று கூறினார்.
இனிமேலும் அரசியல் குறித்து பேசாமல் இருப்பது நல்லது இல்லை என்ற அடிப்படியிலேயே, தனது கருத்துகளை தெரிவித்து வருவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
0 comments: