அனிதா தற்கொலை மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக பாஜக அரசுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 18ம் தேதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் நடந்து வரும் சூழல், நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன்னுடைய உயிரை தியாகம் செய்த அனிதா, மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை போன்றவை தொடர்பாக, ஒரே நாளில் குஷ்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 10க்கும் அதிகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இப்போது நான் எதுவும் பேசவில்லை என்றால், ஒரு மனிதனாக நான் பிறந்ததற்கு அர்த்தமே இல்லை. இந்தியர்கள் அனைவரும் குடியரசு இந்தியாவில் வாழவே விரும்புகிறார்கள்.
ஆனால், அதனை பாஜக அரசு கொன்று வருவதாக அனைவருமே நம்புகிறார்கள். மூத்த பத்திரிக்கையாளர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும், தகுதியில்லாத பாஜக அரசை சகித்துக்கொள்ள முடியாமல், போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அனிதா தற்கொலை செய்து கொண்டது, மத்தியில் ஆளும் பாஜக அரசு எப்படி செயலாற்றி வருகிறது. இன்னும் எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்ள இருக்கிறார்கள்? மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எப்போதும் ஒரே மாதிரியாக அமைதியாக இருக்க முடியாது. அதனால், மத்திய அரசுக்காக பொறுத்தது போதும், பொங்கி எழுங்கள் என்று கூறியுள்ளார்.
0 comments: