டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால்நேரு பல்கலைக் கழக மாணவர் தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளது. முக்கிய பதவிகளை அந்த கூட்டமைப்பு கைப்பற்றியதால், பாரதிய ஜனதா ஆதரவு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு படுதோல்வியை சந்தித்துள்ளது.
நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் மாணவர் பேரவை தேர்தல், இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
நாட்டின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த பல்கலைக் கழக மாணவர் தேர்தல் முடிவுகள் அமைவதால், இது நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கடந்த 8ம் தேதி நடைபெற்ற இந்த மாணவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட 4 முக்கிய பொறுப்புகளையும் இடதுசாரி ஆதரவு மாணவர் கூட்டமைப்பு மீண்டும் தக்கவைத்துக்கொண்டது.
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அம்மாணவர்கள் வெற்றிபெற்றிருப்பதால், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான ஏ.பி.வி.பி. இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
0 comments: