Saturday, 2 September 2017

மில்லியன்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஊடுருவல்- நிறுவனம் நடவடிக்கை

சமூகத்தளமான இன்ஸ்டாகிராமில் உள்ள மில்லியன்கணக்கான கணக்குகள் ஊடுருவப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

அதன் மூலம் பலரின் தனிப்பட்ட தகவல்கள் களவாடப்பட்டுள்ளன.

தற்போது இன்ஸ்டாகிராமில் 700 மில்லியன் பயனீட்டாளர்கள் உள்ளனர்.

சுமார் 6 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனீட்டாளர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை டோக்ஸாகிராம் (Doxagram) எனும் இணையத்தளத்தில் விற்பனைக்கு விடப்பட்டன.

10 டாலர் செலுத்தி ஒருவரின் தனிப்பட்ட தகவலைப் பெற்றுக்கொள்ளுமாறு இணையத்தளம் கூறியது.

தகவல்களைக் களவாட வழிவிடும் நச்சுநிரல் ஒன்றை இன்ஸ்டாகிராமில் அண்மையில் கண்டுபிடித்ததாக, அதன் இணை நிறுவனர் சொன்னார்.

அதை உடனடியாகச் சரிசெய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் குறித்து நிறுவனம் விசாரித்துவருகிறது.

0 comments: