கோலிவுட்டின் மாஸ் ஹீரோயினான நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சில படங்கள் வெளியாகத்தான் இல்லை என கூறுகிறார்.
டோராவை தொடர்ந்து அவர் சோலோ ஹீரோயினாக இறங்கிய படங்கள் கொலையுதிர்காலம், அறம் ஆகிய படங்கள் தயாராயிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் சமீபத்தில் சிறையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் இயக்கயிருக்கிறாராம்.
சமீபத்தில் பெங்களூரு சிறையில் முறைகேடுகள், சசிகலாவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் டிஐஜி ரூபா. பின் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து மேலும் பல தகவல்களை சேகரித்து வருகிறாராம். இதற்கு ரூபாவும் ஓகே சொல்லிவிட்டாராம். இதில் நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிப்பார்கள் என இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.

0 comments: