Tuesday, 29 August 2017

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான முத்துக்குமாரசாமி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, தமிழக அரசின் தலைமைப் பொறுப்பு வகித்து வரும் பல அதிகாரிகள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான முத்துக்குமாரசாமி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments: