பிரஸ்ஸல்ஸ் நகரில், இராணுவ வீரர்கள் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, இராணுவ வீரர்களைத் தாக்கிய அந்த நபர், சுட்டுக் கொல்லப்பட்டார். அதிகாரிகள், அந்த சம்பவத்தை, பயங்கரவாதக் கொலை முயற்சி என்று வகைப்படுத்தினர்.
பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த அந்த சம்பவத்தை அடுத்து, சில மணி நேரங்களில், லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே, வாள் ஏந்திய ஆடவர் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகளைத் தாக்கினார்.
26-வயது நிரம்பிய அந்த ஆடவர், பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அந்த இரு சம்பவங்களையும் அடுத்து, ஐரோப்பாவின் பெரும்பகுதியில், உயர் விழிப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அங்கு பல தொடர் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றுள் பெரும்பால சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
0 comments: