சென்னை: லைசென்ஸ் இல்லையென்றால் வாகனம் வாங்க இயலாது என்று தமிழக போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் வரை 9,231 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டவை.
இதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சார்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்படி, லைசென்ஸ் இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை என்பது.
இது முந்தைய மோட்டார் வாகனச் சட்டப்படி செல்லுபடியாகும். ஒருவேளை விதிமுறைகளை மீறி, வாகனம் விற்கப்பட்டால் விற்பவருக்கு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ வழங்கப்படும்.
மேலும் புதிய வாகனங்கள் பதிவு செய்யும் முன் இயக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. ஒருவேளை எல்.எல்.ஆர் வைத்திருந்தால், அவர்கள் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படுவர்.
இந்த விதிமுறைகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கட்டாயம் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 comments: