வேலியே வேலியை மேய்ந்த கதை …. பெண் சப்-இன்ஸ்பெக்ட்ரிடம் அத்துமீறிய போலீஸ் அதிகாரி !!!
கேஆர்பி அணையில் இருந்து 5,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
நீட்-க்கு எதிரான போராட்டங்களுக்கு தடைக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் நாளை டிடிவி தினகரன் சந்திப்பு நாளை 12 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் டிடிவி.தினகரன் உடன் 10 பேருக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி.
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் & புதுச்சேரியில் 6வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
கெளரி லங்கேஷ் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது சகோதரர் இந்திரஜித் லகேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியல்வாதிகளின் சொத்துகள் உயர்வது எப்படி ? : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
ஜாக்டோ - ஜியோ அமைப்பு இரண்டாக பிரிந்து ஒரு பிரிவு திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் , மற்றொரு பிரிவு போராட்டத்தில் பங்கேற்காது எனவும் அறிவிப்பு.
ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 27 மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.
கோவையில் பெண் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்த புகாரில், உதவி ஆணையர் ஜெயராமன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - டிஜிபி நடவடிக்கை.
அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதா குடும்பத்தினரை சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையை தடுக்க நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்.நீட் தேர்வு விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில்தான் அரசும் உள்ளது - மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடிவருவதால் அரியலூர் கலைக் கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை - கல்லூரி முதல்வர் இருளப்பன் அறிவிப்பு.
ஜக்கி வாசுதேவின் நதிகளை மீட்போம் திட்டத்திற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். எந்த அரசாக இருந்தாலும் ஆற்றில் மணல் அள்ளுவதை சிறிது காலத்திற்காவது தடை செய்ய வேண்டும் : வெல்லமண்டி நடராஜன்.
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் 2 மாத சிறைவாசத்திற்கு பின் தந்தையின் நினைவுதின சடங்கில் பங்கேற்பதற்காக 2 மணி நேரம் பரோலில் வந்தார்.
நாகை : மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் மண் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை கோரி தொடர்ந்த வழக்கு : முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், விசாரணையை நாளை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மருத்துவ படிப்பில் இடம் பெற்று தருவதாக மாணவர்களிடம் பணமோசடி செய்த வழக்கில் பச்சமுத்து மற்றும் வேந்தர் மூவீஸ் மதன் ஆகியோரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.
அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, திமுக முன்னாள்அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்.
திருச்சி : மியான்மர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மியான்மர் கொடி, அதிபர் உருவ படம் எரிப்பு.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிச் சேர்ந்த எம்.எல்.ஏ. சன்னமநேனி ரமேஷின் குடியுரிமையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
2500 உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் : உயர்நீதிமன்ற கிளை.
மக்களுக்காக திமுக நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது : எம்பி திருச்சி சிவா.
மத்திய அரசின் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள 412 பயிற்சி மையங்கள் - அமைச்சர் செங்கோட்டையன்.
எங்கள் ஆதரவாளர்கள் யாரும் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை : தங்கதமிழ்ச்செல்வன்.
மெரினா கடற்கரையில் ஆயுதப்படை காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது.
பெண் பத்திரிகையாளர் கொலை திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை, மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை - கர்நாடக முதலமைச்சர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
குழுமூரில் மருத்துவமனை கட்டப்பட்டு அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் : நடிகர் ஆனந்தராஜ்.
கமல் போன்று நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது : எஸ்வி.சேகர்.
பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் மரணம் குறித்து கர்நாடக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு.
நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி நிர்வாகம்.
நீட் தேர்வுக்கு நான் கையெழுத்திடவில்லை; சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
ஒடிசா மாநிலத்தில் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்வு.
ப்ளூவேல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அலோசனை.
நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர், இது விடை காணும் வேளை என்று நீட் குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
மாணவி அனிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.
0 comments: