அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து மதுரை மற்றும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அணு உலை எதிர்ப்பு , மீத்தேன்-ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு உள்ளிட்ட மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளுக்கு எதிராக மே 17 இயக்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசை கண்டித்து மே 17 மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் மதுரை மற்றும் சென்னையில் உள்ள பாஜகவின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் . ராஜா, பிரதமர் மோடி , நிர்மலா சீத்தாராமன் , தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆகியோரின் உருவ படங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன .
இதேபோல் சென்னையில் நடந்த முற்றுகை போராட்டதில் பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
கடந்த மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்திய வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட, நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தற்போது இவர் கைது செய்யபட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: