Tuesday, 5 September 2017

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, மாணவி வளர்மதி மீது தாக்கல் செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். அவர் போராட்டத்திற்கு இளைஞர்களை அழைக்கும் விதமாக அவர் தன் நண்பர்களுடன் துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் என்பதற்காக அவர் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதனை ரத்துசெய்யக்கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி வளர்மதி மீது தாக்கல் செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டது.

காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவி வளர்மதியை சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின் வளர்மதியின் விடுதலையை எதிர்நோக்கி காத்திருப்பதாக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவிக்கின்றனர்.

0 comments: