Saturday, 9 September 2017

மெரினா இல்லைன்னா என்ன பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் தொடக்கம்!!

சென்னை : நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பார்த்து பயந்து போன காவல்துறை, மக்கள் ஒவ்வொன்றிற்கும் போராட தொடங்கும் போது, முதலில் மெரினாவில் மக்கள் கூட தடை போடுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் பெரிய போராட்டம் வெடிக்குமோ என அச்சத்தால், மெரினாவுக்கு பெரிய கேட் போடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தொடங்கியுள்ள போராட்டம் வலுத்து வருகின்றது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக, மெரினாவில் போராட அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

0 comments: