Saturday, 9 September 2017

குடிப்பதில் தலையிட முடியாது; படிப்பதில் முடியுமா?' - சீமான் ஆவேசம்!!

குடிப்பதில் தலையிட முடியாது எனக்கூறும் நீதிமன்றம் படிப்பதில் தலையிடுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அமைதி வழியிலேயே மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு பல கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கூறினார். நாட்டில் நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகமா அல்லது நீதிமன்ற ஜனநாயகமா என தெரியவில்லை என்றும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சீமான் வினவியுள்ளார்.

0 comments: