Saturday, 9 September 2017

பாஜகவுடன் பரிசீலனை கூட்டணி; எடப்பாடி அதிரடி அறிவிப்பு!

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய, அவர், உள்ளாட்சி தேர்தல் வரும் போது பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும், பெரும்பான்மையான அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளதென்றும் கூறினார்.

தமிழகத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது என்று அரசியல் தலைவர்கள் கூறி வந்த நிலையில், முதல்வரின் இந்த அதிரடி பேட்டி, தமிழகத்தில் மோடியின் ராஜ்ஜியம் காலுன்ற போவதாக விமர்சனங்கள் வந்துள்ளன.

0 comments: