யங்கூன், பங்களாதேஷ்: மியன்மார் தனக்கு எதிராக ஐக்கிய நாட்டு அமைப்பு குறைகூறுவதைத் தடுக்க, சீனாவுடனும் ரஷ்யாவுடனும் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிவித்திருக்கிறது.
ரொஹிஞ்சா மக்கள் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பகுதியான மியன்மாரின் ரக்கேன் மாநிலத்திலிருந்து கடந்த 2 வாரங்களில், சுமார் 150,000 பேர் வெளியேறி பங்களாதேஷுக்குச் சென்றனர்.
ரக்கேனில் ஏற்பாடும் பூசலைப் பற்றிய தவறான தகவல்களுக்குப் பயங்கரவாதிகள் காரணம் என்றார் மியன்மாரின் தலைவர் ஆங் சாங் சூச்சி. வெளியேறிய ரொஹிஞ்சா மக்களைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.
முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடுகள் அவருக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. மியன்மாருடனான நல்லுறவை இந்தோனேசியா துண்டிக்கவேண்டும் என்று இந்தோனேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மியன்மாருக்கு நட்பு நாடுகள் என்பதால் ரொஹிஞ்சா விவகாரம் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்திற்குச் செல்லாதவாறு அந்நாடுகள் தடுக்கும் என்று மியன்மாரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நம்பிக்கை தெரிவித்தார்.
0 comments: