Friday, 8 September 2017

மாட்டுக்கறியை உங்கள் நாட்டிலேயே சாப்பிட்டுவிட்டு இந்தியாவுக்கு வாருங்கள்: மத்திய மந்திரி உபதேசம்!

புதுடெல்லி:

சமீபத்தில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தின்போது சுற்றுலா மந்திரியாக பொறுப்பேற்று கொண்ட அல்போன்ஸ் கன்னநத்தம் அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, கேரளா மற்றும் கோவாவில் மாட்டிறைச்சி பயன்பாட்டுக்கு தடை ஏதுமில்லை. அங்குள்ளவர்கள் தங்களுக்கு பிடித்தமானதை உண்ணலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற அனைத்திந்திய சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அல்போன்ஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்தியாவில் பசுவதை பாதுகாவலர்கள் நடத்திவரும் வன்முறை மற்றும் மாட்டிறைச்சி பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் இந்திய சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பாதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ’அவர்கள் (வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்) தங்கள் நாட்டில் மாட்டிறைச்சியை சாப்பிட்டுவிட்டு இந்தியாவுக்கு வரலாமே’ என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களோடு பா.ஜ.க.வுக்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை என தெரிவித்திருந்த அல்போன்ஸ் கன்னநத்தம் மூன்றே நாட்களில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிட்டுள்ளார்.

0 comments: