நீட் தேர்வை ரத்து செய்யும் படி தனது வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியை சபரிமாலாவை அவரது வீட்டிற்கே சென்று போலீசார் மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்பினரும், மாணவர்களும் அனிதாவின் மரணத்துக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர். இரவு, பகல் பாராது நீதியை மட்டுமே வேண்டி உலகளவில் போராட்டம் இந்த வெடித்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விழுப்புரம் மாவட்டம், வைராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த அரசு ஆசிரியை சபரிமாலா, தனது 7 வயது மகனுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். நியாயமான தனது போராட்டத்துக்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தினால் நேற்று தனது வேலையை இவர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ஆசிரியை சபரிமாலா நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தனது வீட்டில் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று, நீட் தேர்வு ரத்து செய்ய கோரி போராட்டங்கள் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து ஆசிரியை சபரிமாலாவை அவரது வீட்டிற்கே சென்று காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். மேலும், ஆசிரியை சபரிமாலைவைத் தவிர வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது எனக் கூறியும், அங்கிருந்த நபர்களை அப்புறப்படுத்தியும் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வீட்டிற்குள் போராட்டம் நடத்தவும் அனுமதி வாங்க வேண்டும் என்றும் ஆசிரியை சபரிமாலாவை போலீசார் எச்சரித்துள்ளனர்.
0 comments: