திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் உண்டியல் மூலம் 93 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் வசூலாகும் உண்டியல் பணம் குறித்து தேவஸ்தானம் தெரிவித்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை 23 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் கூறியுள்ளது.
மேலும், திருமலையில் 52 லட்சம் பக்தர்கள் இலவச உணவு சாப்பிட்டதாகவும், 11 லட்சம் பேர் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தியதாகவும் தேவஸ்தானத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: