Monday, 4 September 2017

“பாடத்திட்டத்தின் தரத்தை காட்டி நீட் தேர்வை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” -பிரின்ஸ் கஜேந்திரபாபு

பாடத் திட்டத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி நீட் தேர்வை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளார். 

சிவகங்கையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு நீட் தேர்வால் சமூக நீதி சிதைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். 

பின்னர் நியூஸ் 7தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த பிரின்ஸ் கஜேந்திர பாபு, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அந்த துரோகத்திற்கு தமிழக அரசு துணைபோயுள்ளதாகவும் கூறினார். 

நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கு பெறும் முயற்சி மேற்கொள்ளும் அதே வேளையில் இந்த ஆண்டு நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பாடத்திட்டத்தை சுட்டிக்காட்டி நீட்டை திணிப்பதை ஏற்க முடியாது என்றும் கஜேந்திரபாபு கூறினார்.  

0 comments: