Monday, 4 September 2017

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற மைதானத்தில் மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!



நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் புதுவையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற மைதானத்தில் மாணவர்கள் நேற்றிரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுவை ஏஎப்டி மைதானத்தில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில்  பங்கேற்றவர்களை  கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் மாணவர்கள்  கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும்  குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு செல்லும் காவல் வாகனத்தை மாணவர்கள் சிலர் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அவர்களை  காவல்துறையினர்  விரட்டியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்டு கொண்டு சென்ற போது காவல் வாகனத்தின் சாவியை மாணவர்கள் பிடுங்கி எரிந்ததாகக் கூறி காவல் துறையினர் ஆத்திரமடைந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் கோரிமேட்டில் உள்ள காவலர் வளாகத்தில் வைக்கப்பட்டனர்.

0 comments: