மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். மற்றும் வவுனியா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ். குடாநாட்டில் மானிப்பாயின் ஒரு பகுதி, பருத்தித்துறை வெளிச்சவீடு, சிவப்பிரகாசம் வீதி, மூன்றாம் குறுக்குத் தெருப் பிரதேசம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, வல்லிபுரம், உபய கதிர்காமம், புனிதநகர், கற்கோவளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளது.
இதேவேளை இன்று காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரை வவுனியாவின் சில பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, தாண்டிக்குளத்திலிருந்து புளியங்குளம் வரை, ஓமந்தை, ஓமந்தை வீட்டுத் திட்டம், ஓமந்தை மீன்பிடி வலைத் தொழிற்சாலை, வேளாங்குளம், விமானப்படை, ICT கல்லூரி, Union Aliance Ltd, AMP ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
0 comments: