Saturday, 9 September 2017

இருவரி செய்திகள் தொகுப்பு;09/09/2017

மேற்குவங்க மாநிலத்தின் பெயர் பங்களா என பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது



ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவாக ஒருமித்த கருத்து ஏற்பட மத்திய அமைச்சர் நக்வி வேண்டுகோள் விடுத்தார்


புதிய மஹிளா காங்கிரஸ் தலைவராக சுஷ்மிதா தேவ் நியமனம்



டெல்லியில் 7 வயது சிறுவன் பள்ளி வளாகத்தில் கொல்லப்பட்ட சம்பவம்: அறிக்கை அளிக்க சிபிஎஸ்சி உத்தரவு



பனமா கேட் மோசடி: தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மனு



வங்காள தேசத்திற்குள் நுழைந்த ரோஹிங்கியாக்களின் எண்ணிக்கை 3,00,000 த்தைத் தொட்டது



இர்மா புயல்: 50 இலட்சம் பேர் இடப்பெயர்வு



வேலூரில் முதல் அமைச்சர் பழனிச்சாமி பேசிய மேடையில் மின் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு



போக்குவரத்து ஊழியர்கள் செப். 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு



பீரங்கி தடுப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்தியா


நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: பெரம்பூரில் பள்ளி மாணவிகள் சாலை மறியல்


முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடு, அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு



வேலூர் மாவட்டத்தில் 8 துணை மின் நிலையங்கள் : முதல்வர்


காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: காவலர் வீர மரணம்


திருவள்ளூர்: வைரஸ் காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி



 பேங்க் ஆப் அமெரிக்காவின் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் ஜா, 34டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது



பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க அதிநவீன கருவி – ராம்விலாஸ் பாஸ்வான்.



இந்தியாவின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்.


அ.தி.மு.க. தான் பா.ஜனதாவின் ஜெராக்ஸ் அரசாக செயல்படுகிறது: சீமான் பேட்டி.


காஷ்மீர்: ஆனந்த்நாகில் போலீசார் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி


தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களுக்கு ஆமைக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும் குட்டிகதை மூலம் முதல்-அமைச்சர் பழனிசாமி


சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவிகள் மீது நடவடிக்கை பாயும் டிசி கொடுப்போம்  என தலைமை ஆசிரியர் மிரட்டியாதால் பிரச்சனை பெரிதானது : பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை முற்றுகை.


உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு.


கட்சி பொறுப்பில் இருந்து எம்.எல்.ஏக்கள் நரசிம்மன், தோப்பு வெங்கடாசலம் நீக்கம் - டிடிவி தினகரன் அறிவிப்பு.


ஹைதராபாத்தில் ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக மூவரை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.


அதிமுக அம்மா அணி அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து ஜக்கையனை நீக்கினார் டிடிவி தினகரன்.


போக்குவரத்து தொழிலாளர்கள் செப்டம்பர் 24 முதல் வேலைநிறுத்தத்தில ஈடுபடப் போவதாக அறிவிப்பு.


முக. ஸ்டாலினுக்கும் தமிழ் மண்ணுக்குமே சம்பந்தமில்லை என திருச்சி கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு.


முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன்க்கு சொந்தமான இடங்களிலும்  சிபிஐ அதிகாரிகள்  சோதனை.


ஜம்மு - காஷ்மீரில் 4 நாள் பயணம் : முதலமைச்சர் மெகபூபா உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு.


செப்- 11 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.


நாக் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் அறிவிப்பு.


ஜவாஹிருல்லாவிற்கு என்ன தெரியும் ஜால்ரா போடுவதை தவிர : மருத்துவர் கிருஷ்ணசாமி.


மாநிலம் முழுவதும் 1000 சிறைக்காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது சீருடை பணியாளர் தேர்வு மூலம் உரிய தீர்வு காணப்படும் : ஏடிஜிபி சைலேந்திர பாபு.


கோவை- திருச்சி சாலையில் சிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்தி கார் மீது லாரி மோதி விபத்து.


கோவை அன்னூரில் ப்ளு வேல் விளையாடிய 2 மாணவர்களை போலீசார் மீட்டனர்.


அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சித் தலைவராக சுஷ்மிதா தேவ் நியமனம்.


வேலூரில் 8 அனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு.


நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே முள்ளுகுறிச்சியில் மளிகை கடை நடத்தி வரும் பெண் கந்து வட்டி கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை.


வயது மூப்பு காரணமாக வழக்கறிஞர் பணியை தொடர முடியாததால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி.


பழனி முருகன்  கோவில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் 12ம்தேதி  முதல் ஒரு மாதத்திற்கு  ரோப்கார் சேவை நிறுத்தப் படுவதாக  கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

0 comments: