Sunday, 3 September 2017

மலேசியாவில் அபு சய்யாஃப் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் நபருடன் 7 பேர் கைது!

கோலாலம்ப்பூரில் ஐ எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அபு சய்யாஃப்பைச் சேர்ந்த 7 பேருடன் அதன் தலைவர் என நம்பப்படும் நபரும் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அபு அசிரி என்று அழைக்கப்படும் ஹாஜார் அப்துல் மூபினை கடந்த புதன்கிழமை நடந்த சோதனையில் கைதுசெய்ததாகப் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹாஜார் ஃபிலிப்பீன்சைச் சேர்ந்தவர்.
அவருடன் ஃபிலிப்பீன்சைச் சேர்ந்த மேலும் ஒருவர் பிடிபட்டார்.

ஆறு மலேசியர்களும் சோதனை நடவடிக்கைகளில் கைதாயினர்.

த ஸ்டார் ஆங்கில நாளேடு கைது நடவடிக்கைகள் குறித்து முதலில் தகவல் வெளியிட்டது.

கைதானவர்களில் சிலர் பாதுகாவலர்களாகப் பணிபுரிந்தனர் என்றும் சிலர் குடிமைத் தற்காப்புத் தொண்டூழியப் படை வீரர்களாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.

0 comments: