சிங்கப்பூர்: போலி நோட்டுகளைக் கொண்டு கப்பல் ஒன்றை வாங்கத் திட்டமிட்டிருந்த 2 ஆடவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கைதானவர்களில் ஒருவருக்கு 36 வயது; மற்றொருவருக்கு 39 வயது. அந்த இரண்டு பேரும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை (2 செப்டம்பர்) கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
சந்தேக நபர்களில் ஒருவர் ஃபிரெஞ்சு நாட்டவர் என்றும் மற்றொருவர் ரொமேனியாவைச் சேர்ந்தவர் என்றும் டுடே செய்தி இணையத்தளம் அறிகிறது.
சனிக்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு, கப்பலை விற்கவிருந்தவர் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த விற்பனையை நிறைவுசெய்ய ஃபிரான்சுக்குச் சென்றிருந்ததாகக் காவல்துறை கூறியது.அப்போது கப்பலுக்கான வைப்புத் தொகையைக் கட்டுவதற்குப் போலி நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அந்நபர் அறிந்துகொண்டார்.
விற்பனைக்கான முகவர் சேவைக் கட்டணத்தைப் பெற அந்த இரண்டு பேரும் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர்.
சேவைக் கட்டணத்தைக் கொடுக்க வேண்டாம் என்று கப்பல் விற்பனையாளர் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அதற்குள் அந்த இரண்டு ஆடவர்களும் பணத்துடன் சென்றுவிட்டனர்.
காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்ட மூன்று மணி நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 400,000 வெள்ளிக்கு மேல் பணம் இருந்தது.
0 comments: