நீட் தேர்வு எதிர்த்து வழக்கு தொடர்ந்து உச்சநீதிமன்றம் வரை சென்ற மாணவி அனிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கின்றார்.
இதனை தொடர்ந்து மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்கும் விதத்தில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கு ஆர்பாட்டம் நடை பெற்று வருகிறது இந்த ஆர்பாட்டத்தில் மாணவர்கள் , பல்வேறு அமைப்பினர், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஈடு பட்டு வருகின்றனர் .
இதனை தொடர்ந்து சென்னையில் அண்ணா சாலை , வள்ளுவர் கோட்டம் என அனைத்து பகுதிகளிலும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.மேலும் மாணவியின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், குழுமூரில் பெரும் பதற்ற நிலை நிலவி வருகிறது.
பொதுமக்கள் தொடர்ந்து வருகை தந்து மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இந்நிலையில் ஜல்லிகட்டுக்கு போராட்டத்தை போல, மாணவர்கள் மீண்டும் மெரினாவில் ஒன்று சேர்ந்து அனிதா மறைவிற்கு நீதி கேட்டும், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட வாய்ப்புள்ளதால், இன்று மெரினாவிற்கு வரும் இருசக்கர வகை ஓட்டிகளை திருப்பி அனுப்பு கின்றனர். உள்ளே யாரும் நுழையாதவாறு தீவிர கண்காணிப்பில் இறங்கி உள்ளனர் போலீசார் .
0 comments: