Thursday, 7 September 2017

கோவில் கோபுரத்திலும் போராட்டம்; திணறும் போலீசார்!!

நீட் தேர்வுக்கு எதிராக கோவிலின், கோபுரத்தில் ஏறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அவர்களை அப்புறப்படுத்த கோபுரத்தில் ஏற முடியாமல் போலீசார் திணறினர்..

மத்திய அரசின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் 7 வது நாளாக பேராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலின் கோபுரத்தில் ஏறி மாணவர்கள் பேராட்டம் நடத்தினர். கோயிலின் சுற்றுச்சுவர் மற்றும் கோபுரங்கள் சற்று உயரமாக இருந்ததால், மாணவர்களை அப்புறப்படுத்த அங்கு விரைந்த பேபாலீசார் திணறினர்.

இதனையடுத்து கூடுதலாக போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மாணவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

போலீசாரின் அனுமதி பெறாமல் திடீரென்று நடந்த இந்த போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: