சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், அறவழியில் இருக்க வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கனவில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் போராட்டக் களத்தில் குதித்துள்ளன. அரசியல் கட்சிகளும், கல்லூரி மாணவர்களும் போராடி வந்த நிலையில், நேற்று பள்ளி மாணவிகளும் போராட்டத்தில் இறங்கினர்.
அரசுப் பள்ளி மாணவிகளின் 4 மணி நேர இடைவிடாத போராட்டத்தால் தமிழகம் கொதித்துப் போய் உள்ளது. இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் டிவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், 'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை.
அதன் விதை பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோவில் TN வணங்குதல் நலம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அறவழியில் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சட்டத்தை உருவாக்கி உள்ளோம். அதனால் அதன்படி நடப்போம். நல்ல முறையில் நீட் எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்வோம் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
0 comments: