பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதையடுத்து, ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் பல சுவாரஸ்யத்தை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, கமல்ஹாசன் ஆவேசமாக சில வார்த்தைகளை பேசினார்.
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ஆர்த்தி மற்றும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சில போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார் .அதில் ஜூலீயும் ஒருவர். ஜூலியை வரவேற்கும் போது மக்கள் மத்தியில் எந்த வரவேற்பும் இல்லை. இதனை கண்ட கமல், " இந்த சின்ன பெண் மீது நீங்கள் காண்பிக்கும் கோவத்தை ஏன் அரசியல் வாதிகள் மீது காண்பியுங்களேன் என சொன்னார், அதாவது "குண்டர்" சட்டத்தில் உள்ளே இருக்க வேண்டியவர்கள் எல்லாம் வெளியில் உள்ளனர் என ஆவேசமாக தெரிவித்தார்.
இதிலிருந்து கமல் ஜூலிக்கு ஆதரவு தருகிறாரா அல்லது அரசியல் வாதியை எதிர்க்க தூண்டி விடுகிறாரா என்பது நிகழ்ச்சியை பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்.
0 comments: